போக்குவரத்து தடைப்பட்டதால் 135 கி.மீ., உணவின்றி நடந்தே சென்ற பரிதாபம்

நாக்பூர்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானதையடுத்து, பல்வேறு பயண கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மஹாராஷ்டிராவில் 26 வயது கூலித் தொழிலாளி ஒருவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக உணவின்றி 135 கி.மீ தூரம் நடந்தே சென்றுள்ளார்.


கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலானதையடுத்து, அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. இதன் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து, தங்கள் இருப்பிடத்திலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். சிலர் ஊரடங்கு அமலுக்கு முன்பாக கிடைத்த பேருந்தில் கூட்டம் கூட்டமாக கிளம்பினர். சிலர் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். புனேவில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் நரேந்திர செல்கேவும் தனது சொந்த ஊரான சந்திராபூர் செல்ல திட்டமிட்டு, புனேவில் இருந்து நாக்பூர் செல்லும் கடைசி ரயிலை பிடிக்க முடிவெடுத்தார்.